பருப்பை இங்கே உற்பத்தி செய்வோம், பெட்ரோலை இறக்குமதி செய்வோம் - கரு.பழனியப்பன் விளாசல்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இயக்குநர் கரு.பழனியப்பன் மத்திய மாநில அரசுகளை விளாசியுள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இயக்குநர் கரு.பழனியப்பன் மத்திய மாநில அரசுகளை விளாசியுள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு பருப்பு உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கிராம மக்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் மக்கள் அனுமதியில்லாமல் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என கூறும் அரசுகள் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி பெட்ரோல் எடுப்பது எப்படி கார் ஓட்டுவது என அரசு கேட்பதாக கூறிய கரு.பழனியப்பன், இங்கே பெட்ரோல் எடுத்துவிட்டு பருப்பு எங்கே வாங்குவது என கேள்வி எழுப்பினார்.
மேலும் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை இங்கே உற்பத்தி செய்வோம். பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம் என்றும் அவர் கூறினார். கரு.பழனியப்பனின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications