லலித் மோடி பற்றி சந்திரமண்டலத்தில்தான் பேசுவாரோ மோடி?.. சீண்டும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நடைபெறும் பிரச்சனைகளைப் பற்றி இந்தியாவில் பேசுவதே கிடையாது. வெளிநாடுகளில்தான் போய் பேசுவார். லலித்மோடி விவகாரம் தொடர்பாக அநேகமாக சந்திர மண்டலத்தில் போய் பேசுவார் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவனிடம் லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்தவித கருத்தும் சொல்லாமல் இருக்கிறார் என்று சொன்னால், ஒருவேளை அவர் நாளைக்கு ஏதாவது ஒரு தேசத்திற்கு போய் சொல்லுவார் என்று நினைக்கிறேன்" என்றார்.

சந்திரமண்டலத்தில் பேசலாம்
பிரதமர் மோடி இந்திய பிரச்சனைகளை இந்தியாவில் பேசுவதே கிடையாது. இந்தியாவைப் பற்றி, இந்தியாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளை வெளிநாடுகளில்தான் போய் பேசுவார். அநேகமாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் சந்திர மண்டலம் போனாலும் போவார். அங்கே போய் பேசினாலும் பேசுவார் என்று நான் நினைக்கின்றேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

ஆர்.கே.நகரில் முகாம்
ஆர்.கே.நகரில் கட்சி கரை வேட்டிக்கொண்டு உயர் போலீஸ் அதிகாரி பிரச்சாரம் செய்வது பற்றி இளங்கோவனிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், ஆர்.கே.நகரில் ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமல்ல ஏராளமான போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அமைச்சர்களே அங்குதானே முகாமிட்டிருக்கிறார்கள் என்றார்.

ஆரத்திக்கு பணம்
அமைச்சர் வரும்போது மக்கள் ஆரத்தி எடுக்கிறார்கள். அவர்களுக்கு அமைச்சர் வணக்கம் போட்டு சென்றுவிடுகிறார். பின்னால் வருபவர்கள் ஆரத்தி எடுத்தவர்களுக்கு ஆயிரம், இரண்டாரம் ரூபாய் என போடுகிறார்கள். இது பத்திரிக்கைகளிலும் வந்திருக்கின்றது. இதைப்பற்றி எந்தவிதமான நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

சேஷன் காலத்தில்
சேஷன் அவர்கள் ஒரு முறை தேர்தல் ஆணையராக இருக்கும்போது, பெருந்துறையில் இடைத்தேர்தல் வந்தது. அதை மிகவும் நியாயமாக அன்றைக்கு சேஷனின் வழிகாட்டுதலில் தமிழக தேர்தல் ஆணையம் செய்தது என்றார்.

அதிமுகவிற்கு ஜால்ரா
இன்றைக்கு தேர்தல் ஆணையமும், அதில் அதிகாரிகளாக இருக்கிறவர்களும் அதிமுகவுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவும், மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்கு அதிமுக அமைச்சர்களுக்கு வழி ஏற்படுத்தி தருகின்ற ஏஜெண்டுகளாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றக் கூடிய தேர்தல் ஆணையமாக இல்லை என்றும் கூறினார்.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications