மனோரமா மறைவு எதிரொலி... நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா?
சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா மரணமடைந்திருப்பதால் நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் மிக மூத்த உறுப்பினர் மனோரமா. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக எழுந்த மோதல்கள் நடந்து வந்த சண்டைகள், கருமம் கருமமாக இரு தரப்பும் பேசி வந்தவை எல்லாம் மனோரமாவை பெரும் மன வேதனைக்குள்ளாக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அவர் மரணமடைந்துள்ளார். திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர் மனோரமா. அவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன்பு மனோராவை எட்டிக் கூட பார்க்காத பலர் தேர்தலையொட்டி ஓடி ஓடிப் போய் பார்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மனோரமா மறைவுக்கு தற்போது திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும், நடிகர் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டமும் ரத்து செய்யபப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications