சமூகவிரோதிகள் என கூறிய கருத்துக்கு ரஜினி வருத்தம் தெரிவித்திருக்கலாமே!
ரஜினிகாந்த் பொத்தாம் பொதுவாக சமூகவிரோதிகள் என கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த், சமூகவிரோதிகள் என பொதுவாக கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்ப்பு நிலவுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 22-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர்.

கருத்துகள்
இவர்கள் போலீஸாரை தாக்கியதால் மட்டுமே வன்முறை ஏற்பட்டது என்றார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடந்த பிரஸ் மீட்டில் சமூகவிரோதிகள் என்றால் யார் என்றும் போலீஸுக்கும் ஆதரவான கருத்துகளையே கூறுகிறீர்களே என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சமூகவிரோதிகள்
அதற்கு ரஜினி பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிவிட்டு சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில் ரஜினிகாந்த் இன்று வருத்தம் தெரிவித்தார். நியாயமாக பார்த்தால் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டியது சமூகவிரோதிகள் என்று கூறியதற்குத்தான்.

ஒரு நபர் குழு
துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸ் விசாரணை, சிபிசிஐடி விசாரணை, நீதிபதி சுகுணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை என யாருமே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

ரஜினியால் வருத்தம்
சுருக்கமாக சொல்ல போனால் வன்முறையாளர்கள் யார் என்பது குறித்து அரசும் எந்தஒரு முடிவையும் எடுக்காத பட்சத்தில் தான்தோன்றித்தனமாக ஒரு கருத்தை பொத்தாம் பொதுவாக அழுத்தம் திருத்தமாக, விடாபிடியாக ரஜினி கூறியது அப்பகுதி மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா
தீர விசாரணைக்கு பிறகு எடுக்கப்படும் ஒரு முடிவை ஆரம்பத்திலேயே கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்ததை போன்று சமூகவிரோதிகள் என்று போகிற போக்கில் கூறியதற்கும் ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications