சமூகவிரோதிகள் என கூறிய கருத்துக்கு ரஜினி வருத்தம் தெரிவித்திருக்கலாமே!
ரஜினிகாந்த் பொத்தாம் பொதுவாக சமூகவிரோதிகள் என கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த், சமூகவிரோதிகள் என பொதுவாக கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்ப்பு நிலவுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 22-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர்.

கருத்துகள்
இவர்கள் போலீஸாரை தாக்கியதால் மட்டுமே வன்முறை ஏற்பட்டது என்றார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடந்த பிரஸ் மீட்டில் சமூகவிரோதிகள் என்றால் யார் என்றும் போலீஸுக்கும் ஆதரவான கருத்துகளையே கூறுகிறீர்களே என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சமூகவிரோதிகள்
அதற்கு ரஜினி பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிவிட்டு சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில் ரஜினிகாந்த் இன்று வருத்தம் தெரிவித்தார். நியாயமாக பார்த்தால் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டியது சமூகவிரோதிகள் என்று கூறியதற்குத்தான்.

ஒரு நபர் குழு
துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸ் விசாரணை, சிபிசிஐடி விசாரணை, நீதிபதி சுகுணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை என யாருமே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

ரஜினியால் வருத்தம்
சுருக்கமாக சொல்ல போனால் வன்முறையாளர்கள் யார் என்பது குறித்து அரசும் எந்தஒரு முடிவையும் எடுக்காத பட்சத்தில் தான்தோன்றித்தனமாக ஒரு கருத்தை பொத்தாம் பொதுவாக அழுத்தம் திருத்தமாக, விடாபிடியாக ரஜினி கூறியது அப்பகுதி மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா
தீர விசாரணைக்கு பிறகு எடுக்கப்படும் ஒரு முடிவை ஆரம்பத்திலேயே கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்ததை போன்று சமூகவிரோதிகள் என்று போகிற போக்கில் கூறியதற்கும் ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய் -
"ரஜினிகாந்த் அறிக்கைக்கு பதில்"! தவெக பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா! -
ஆதவ் வாயை கட்டுங்க விஜய் இல்லன்னா பிரச்சனை..! எச்சரிக்கை விடுத்த ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி சர்ச்சையில் புதிய திருப்பம் -
கடிவாளம் போடாமல் ஆடவிட்ட விஜய்.. ரஜினிகாந்த் வைத்த ஆப்பு.. சிக்கலில் கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா! -
ரஜினி பயந்தாங்கோளி கிடையாது.. ஆதவ் அர்ஜுனா விளக்கம் தரணும்.. தவெக மேடையிலே கிளம்பிய எதிர்ப்பு -
"தேரை இழுத்து தெருவில் விட்றாதீங்க"! விஜய்யால் சைலன்ட்டான ஆதவ்? பிரஸ் மீட் ரத்துக்கு பின்னணி என்ன? -
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
Rajinikanth: அன்று காக்கா- கழுகு கதையால் விஜய்யை விமர்சித்த ரஜினி! நடந்தது என்ன? வைரலாகும் பழைய கதை! -
மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்! -
ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியே கிடையாது.. விஜய் வெளிச்சத்தில் ஒட்டி இருக்கிறார்.. சாடிய இயக்குநர் அமீர்! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications