"பார்ரா.. தினகரன் லீடிங்கா..." - சிறையில் சசிகலா மகிழ்ச்சி?!
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளில் நிகழும் மாற்றங்கள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தெரிந்துகொள்ள சசிகலா ஆர்வத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகிறது.
Recommended Video

பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை நொடிக்கு நொடி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சையோ இல்லையோ, சசிகலாவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தமாகவே கருதப்படுகிறது. சசிகலா சிறையில் இருக்கும்போது அதிமுக துண்டுதுண்டாக்கப்பட்டு, மீண்டும் ஒட்டப்பட்டு, தினகரன் ஓரங்கட்டப்பட்டு என்று பல எதிர்ப்பாராத சம்பவங்கள் நடந்தேறின.

ஜெயலலிதா இறந்த பின் அதிமுக குறித்து மக்களின் மனநிலை என்ன, அவர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இதற்கான விடையை தெரிந்துக்கொள்ள ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு சிறந்த வழியாக தற்போது கருதப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே தினகரன் முன்னிலை பெறும் செய்தி அறிந்து பெங்களூரு சிறையில் சசிகலா மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் முடிவுகளின் நகர்வுகளை அவர் நொடிக்கு நொடி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கு சிறை அதிகாரிகளின் உதவியை சசிகலா நாடினாரா, அல்லது தன்னார்வத்தில் சிறை அதிகாரிகள் சசிகலாவிற்கு உதவுகிறார்களா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் தினகரனின் முன்னிலை சசிகலாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதாவின் சமாதி மீது மூன்று முறை அடித்து சசிகலா செய்த சத்தியத்தில் ஒன்று ஆர்.கே.நகரில் தினகரனை வெற்றியடைய வைப்பேன் என்ற சபதமாக கூட இருக்கலாம்.












Click it and Unblock the Notifications