For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: இன்னும் 3 நாட்களில் கடை மடைக்கு நீர் வரும்.. முதல்வர் பழனிசாமி உறுதி

காவிரி நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கோவை: காவிரி நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அவருடன் தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் வெள்ள பகுதிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில் கோவையில் இருந்து சென்னை கிளம்பினார் தமிழக முதல்வர் பழனிசாமி.

Will utilize the Cauvery water well says TN CM

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காவிரி பிரச்சை, பவானி வெள்ளம் என்று பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

அதில், பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பித்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தரப்படும்.

மழை நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கடலில் கலக்கும் நீரை சேமிக்க தடுப்பணை கட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. தடுப்பணை கட்டுவது குறித்து குழு அறிக்கை அளித்ததும் முடிவு.

காவிரியில் அதிக அளவில் வெள்ளம் வருகிறது. எல்லா அணைகளும் நிரம்பி வழிகிறது. காவிரி நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்றுள்ளார்.

English summary
Will utilize the Cauvery water well says Tamilnadu Cheif Minister Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X