தமிழகத்தில் கை கொடுக்கும் காற்றாலை- வெளி மாநில மின்சாரம் அளவு குறைப்பு
நெல்லை: தமிழகத்தில் காற்றாலைகள் சுழலத் தொடங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து வாஙகும் மின்சாரத்தின் அளவை மின் வாரியம் குறைத்து கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் காற்றாலைகள் மூலம் காற்று வீசும் காலத்தில் கிடைக்கும் மின்சாரம் மட்டுமே மின் வெட்டை சமாளிக்க கை கொடுத்து வருகிறது. ஆனால் அதுவே காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும்போது தேவையான மின்பாதை இல்லாததால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் கூடுதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கத்தரி வெயில் கொளுத்தும் நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் காற்று வீச தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக மிதமான காற்று வீசி வருவதால் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதி வாரத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் அறவே உற்பத்தி ஆகவில்லை. இது தற்போது 1500 மெகா வாட்டை தாண்டியுள்ளது. இரண்டு நாட்கள் முன்பு உள்ள நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 1995 மெகா வாட்டை எட்டியது. இதனால் பல மாவட்டங்களில் மின் வெட்டு தற்காலிகமாக விளக்கி கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை மின் தேவை 12 ஆயிரத்து 995 மெகா வாட்டாக இருந்தது. 11 ஆயிரத்து 634 மெகா வாட் மின்சாரம் வினியோகித்து நிலைமை சரி செய்யப்பட்டது.
சனிக்கிழமை, மாலையிலும் நல்ல காற்று வீசியது. இதனால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வெளியிடங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முதல் வாரம் வரை ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வெளியிடங்களில் இருந்து வாங்கப்பட்டது.
இது தற்போதைய நிலையில் 589 மெகா வாட்டாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்று தொடர்ந்து விசும். இதன் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி தடையின்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மின் வாரியத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications