காற்றாலைகள் புண்ணியத்தால் சற்றே குறைந்த மின் வெட்டு!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதால் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மீண்டும் மின்வெட்டு தலை தூக்கி வருகிறது. தற்போது வீட்டு உபயோகம், சிறு தொழில், பெரிய தொழிற்சாலைகள் என நாள் ஓன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 3 ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதனால் நகர் பகுதிகளில் குறைந்தது 4 மணி நேரமும், கிராமப்புறங்களில் சுமார் 8 மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இது முறையாக அறிவிக்கப்படாமல் செய்யப்படுவதால் கிராமப்புற மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென்மேற்கு பருவகாற்று காலமான அக்டோபர் வரை காற்றாலை மூலம் நல்ல முறையில் மின்சாரம் கிடைத்தது. இதனால் மின் வெட்டு 2 மணி நேரம் மட்டுமே அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நவம்பர் முதல் காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்தது.
தினமும் 20 மெகாவாட்டுக்கும் குறைவாக காற்றாலை மூலம் கிடைத்ததால் தமிழக மின்வாரியம் திணறி போனது.
சில நாட்கள் அது முற்றிலும் நின்று போனதால் சென்னை நகரிலும் தினமும் 2 மணி நேரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் கடந்த இரு நாட்களாக காற்று வீச தொடங்கியுள்ளதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. செவ்வாய்கிழமை மாலை வரை காற்றாலை மூலம் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அது படிப்படியாக 1268 மெகா வாட்டாக உயர்ந்தது.
இந்த சீசன் காலத்தில் 1268 மெகா வாட் காற்றாலை மூலம் கிடைத்தது இது முதல் தடவையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்த நிலையில் மின்தடை செய்யப்படாததால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மின் வினியோகம் சீராக இருந்ததால் மின் வாரிய துறையினர் நிம்மதி பெருமுச்சுடன் இருக்கின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications