காற்றாலைகள் புண்ணியத்தால் சற்றே குறைந்த மின் வெட்டு!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதால் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மீண்டும் மின்வெட்டு தலை தூக்கி வருகிறது. தற்போது வீட்டு உபயோகம், சிறு தொழில், பெரிய தொழிற்சாலைகள் என நாள் ஓன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 3 ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதனால் நகர் பகுதிகளில் குறைந்தது 4 மணி நேரமும், கிராமப்புறங்களில் சுமார் 8 மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இது முறையாக அறிவிக்கப்படாமல் செய்யப்படுவதால் கிராமப்புற மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென்மேற்கு பருவகாற்று காலமான அக்டோபர் வரை காற்றாலை மூலம் நல்ல முறையில் மின்சாரம் கிடைத்தது. இதனால் மின் வெட்டு 2 மணி நேரம் மட்டுமே அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நவம்பர் முதல் காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்தது.
தினமும் 20 மெகாவாட்டுக்கும் குறைவாக காற்றாலை மூலம் கிடைத்ததால் தமிழக மின்வாரியம் திணறி போனது.
சில நாட்கள் அது முற்றிலும் நின்று போனதால் சென்னை நகரிலும் தினமும் 2 மணி நேரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் கடந்த இரு நாட்களாக காற்று வீச தொடங்கியுள்ளதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. செவ்வாய்கிழமை மாலை வரை காற்றாலை மூலம் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அது படிப்படியாக 1268 மெகா வாட்டாக உயர்ந்தது.
இந்த சீசன் காலத்தில் 1268 மெகா வாட் காற்றாலை மூலம் கிடைத்தது இது முதல் தடவையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்த நிலையில் மின்தடை செய்யப்படாததால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மின் வினியோகம் சீராக இருந்ததால் மின் வாரிய துறையினர் நிம்மதி பெருமுச்சுடன் இருக்கின்றனர்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications