இலவச மிக்சிக்கு ஆசைப்பட்டு... பழனியில் பெண் ஒருவர் மயங்கி விழுந்து மரணம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இலவச மிக்சி வாங்கும்போது மயங்கி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழக அரசு சார்பில் 4,500 பேருக்கு இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு நெடுநேரம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில் சிலர் மயங்கி விழுந்தனர்.
இந்நிலையில் இதில் ஒரு பெண், இலவச மிக்சி வாங்கும் போது மயங்கி விழுந்தார். அவரை எழுப்ப முயன்ற போதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications