ஜெ., நலம்பெற வேண்டி பால்குடம் எடுத்த 6 பெண்கள் மயக்கம் - ஒருவர் மரணம்
திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பால் குடம் எடுத்து வந்த 60 வயது மூதாட்டி மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார். மேலும் 6 பெண்கள் மயக்கமடைந்தனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். பால்குடம் எடுத்த 10,000 பேரில் 6 பெண்கள் மயக்கமடைந்தனர். ஒருவர் உயிரிழந்ததை அடுத்து ஐவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நலக்குறைவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கோவில் கோவிலாக பல்லாயிரக்கணக்கில் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பச்சையம்மன் கோவிலில் 10,000 பேர் பால்குடம் எடுத்தனர். இவர்களில் 6 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அனைவரையும் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் மயக்கமடைந்த 60வயது மதிக்கத்தக்க கமலாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த வாரம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், சாமி வந்து ஆடிய பொன்னுத்தாய், குலவை போட்டபடியே திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications