தூத்துக்குடியில் பரிதாபம்.. ஆலைக் கழிவில் சிக்கி பெண் பரிதாப மரணம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொழிற்சாலை ஆலைக் கழிவில் சிக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக காலமாகிவிட்டார். இவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.
தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக சாந்தி கழிவு காகிதங்கள் எடுத்து அதன்மூலம் பெறும் வருமானத்தில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குப்பைகளை சேகரித்துள்ளார் அப்போது அப்பகுதியில் இருந்த மணல் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும்போது அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த நச்சு மணலில் கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சாந்தி தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இதனையடுத்து சாந்தியின் உறவினர்கள் பலியான சாந்தியின் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென்பதை வலியுறுத்தினர். இதனையடுத்து தனியார் ஆலை நிர்வாகம் பலியான சாந்தியின் குழந்தைகளுக்கு ரூ3லட்சம் நிவாரணம் வழங்க முன்வந்தது.
இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications