பிள்ளைங்களாடா நீங்க.. சாப்பாட்டுக்காக அலைய விட்ட மகன்கள்.. வேதனையில் தீக்குளித்தார் தாய்!
பெரியகுளம்: மகன்கள் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைந்ததாலும், தனக்கு முறை வைத்து சாப்பாடு போட்டதால் மனம் உடைந்ததாலும், வேதனை அடைந்த பெண்மணி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி. அங்கு வசித்து வந்தவர் பாண்டியம்மாள். 58 வயதான இவரது கணவர் பெயர் பெரியகருப்பன். இவர்களுக்கு பால் பாண்டி, செல்வம் என இரு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அதே ஊரிலேயே தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

இரு மகன்களும் தங்களது பெற்றோருக்கு முறை வைத்து சாப்பாடு போட்டுள்ளனர். அதாவது சாப்பாட்டு நேரத்துக்கு இவர்களின் வீடுகளுக்களுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் ஒரு மகன் வீடு, அடுத்த வாரம் இன்னொரு மகன் வீடு என.
இது பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பாண்டியம்மாள் செல்வம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காகப் போயுள்ளார். ஆனால மருமகள் வீட்டில் இல்லை. கதவைப் பூட்டி விட்டு போய் விட்டார்.
இதனால் பெரும் அவமானமடைந்த பாண்டியம்மாள் கடும் வேதனையில் வீடு திரும்பினார். இந்த வயிற்றுப்பாட்டுக்காக இத்தனை அவமானமா என்று கூனிக் குறுகிய அவர் தீக்குளித்து விட்டார். அவரை தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மனைவியின் சாவுக்கு மகன்களே காரணம் என பெரியகருப்பன் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிள்ளைங்களாடா நீங்க?
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications