ஆம்னி பஸ்ஸின் அராஜகம் .. நடுரோட்டில் நள்ளிரவில் பரிதவித்த இளம் பெண்
தூத்துக்குடி: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதற்காக முன்பதிவு செய்திருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் தவிக்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி சந்தோஷ்ராஜ். இவரது மகள் சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதற்காக தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவன சொகுசு ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார். 28ம் எண் படுக்கையுடன் கூடிய இருக்கை ஒதுக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு பஸ் புறப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் மாலை 4.30 மணிக்கு சம்பந்தப்பட்ட தனியார் பஸ் கம்பெனிக்கு போன் செய்து பஸ் புறப்படும் நேரம் பற்றி கேட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர் பஸ் எழும்புரிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்படும் என்று கூறியுள்ளார். அந்த பெண் தன்னால் கோயம்பேடு வருவது சிரமம் என்று கூறியுள்ளார். பஸ் நிறுவன ஊழியர் பெருங்களத்தூர் காமராஜர் சிலை சந்திப்புக்கு பஸ் இரவு 10.30 மணிக்கு வரும். நீங்கள் அங்கு ஏறி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி அந்த இளம்பெண் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இரவு 9.45 மணி முதல் பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வரவே இல்லை. பேருந்து வராதது குறித்து அப்பெண் கோயம்பேடு பேருந்து அலுலகத்துக்கு போன் செய்து கேட்டபோது உங்கள் தேவையெனில் நீங்கள் பேருந்தை கண்டுபிடித்து ஏற வேண்டும் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இதற்கு அந்த பெண் எனக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி தாருங்கள் என அவர் கேட்டுள்ளார். அதற்கு ஆன்லைனில் போய் பணத்தை எடுத்துகொள் என்று மரியாதை இல்லாமல் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண் நள்ளிரவு 1.30க்கு திருச்சி, மதுரை என பல பஸ்கள் மாறி ஊர் வந்து சேர்ந்துள்ளார். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள பேருந்து அலுவலகத்தில் கேட்டதற்கு அங்கிருந்த ஊழியர் தகுந்த பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், சரியான பதில் அளிக்காமல் எனது மகளை நள்ளிரவில் தவிக்க விட்ட தனியார் பேருந்து நிர்வாகத்தினை சட்ட ரீதியாக அணுகுவேன் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications