பல்லாவரம் ரயில் நிலையத்தில் பெண் எஸ்.ஐயிடமே சில்மிஷம் செய்த வாலிபர்
சென்னை: பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் பெண், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல் துணை ஆய்வாளர் பணி முடிந்து நேற்றிரவு சென்னை பல்லாவரம் ரயில்நிலையத்தை அடைந்தபோது, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பெண் எஸ்.ஐ மஃப்டியில் இருந்ததால் அடையாளம் தெரியாமல் அவரிடம் வாலாட்டியதாக தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரை விரட்டி பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.
புள்ளி விவரப்படி தமிழகத்தில் 2011ல் 6,940 குற்றங்களும், 2012ம் ஆண்டில் 7,192 குற்றங்களும், 2013ம் ஆண்டில் 7,475 குற்றங்களும் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.