மீண்டும் தலையெடுக்கும் கந்துவட்டி கொடுமை: ஒட்டன்சத்திரத்தில் பெண் தற்கொலை
திண்டுக்கல் : தமிழகத்தில் கந்துவட்டியால் மீண்டும் ஒரு மரணம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழகத்தில் கந்துவட்டி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி கந்துவட்டி கொடுமையின் காரணமாக இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்தினரோடு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் கந்துவட்டி மரணங்கள் குறைந்திருந்தது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தில் கந்துவட்டி கொடுமையால் விமலாதேவி என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
வள்ளிமுத்து என்பவரிடம் விமலாதேவி வாங்கிய கடனுக்காக வட்டி கட்டியும், பலமுறை கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்ததால், காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மீண்டும் கந்துவட்டி கேட்டு வள்ளிமுத்து மிரட்டியதை அடுத்து நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து விமலாதேவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications