அன்புமணியால் மட்டுமே முடியம் என பெண்கள், விவசாயிகள் நம்பிக்கை: சொல்வது அன்புமணி
சேலம்: அன்புமணியால் மட்டுமே தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியும் என பெண்கள் நம்புகிறார்கள் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞர் அணி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வேண்டாம் என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். வரும் சட்டசபை தேர்தலில் பாமக மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும். இளைஞர்கள் மத்தியில் பாமகவுக்கு பெரும் ஆதரவு உள்ளது.
அன்புமணியால் மட்டுமே தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியும் என பெண்கள் நம்புகிறார்கள். அன்புமணியால் மட்டுமே வேளாண் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.
மின் ஆளுமை மூலம் நேர்மையான நிர்வாகத்தை அளிப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன். தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தலைமை செயலாளர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications