For Daily Alerts
Just In
அம்மா உணவக சாம்பாரில் மிதந்த 'அழையா விருந்தாளி'.. பொதுமக்கள் அதிர்ச்சி
அம்மா உணவக சாம்பாரில் பல்லி இருந்ததைக் கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார்.
நாகர்கோவில் : அம்மா உணவகத்தில் சாப்பிட்ட பெண், அதில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஏஞ்சல். இவர் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது உறவினரைக் காணச் சென்றார். அதன்பின் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் வாங்கினார்.
அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சாம்பாரில் பல்லி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வாந்தி எடுத்த அவருக்கு மருத்துவமனை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறையினர் அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தினர். உணவு மாதிரிகளை பாளையங்கோட்டை உணவு சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பல்லி இருந்த உணவைச் சாப்பிட்ட ஏஞ்சல் இதுகுறித்து புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments
English summary
Women get shocked after seeing lizard in amma unavagam's sambar. Food safety officials went on search in nagarkovil.