அடுத்தடுத்து பச்சை துரோகம்.. சங்கடப்படுத்திய சங்கீதா.. துத்தநாகத்தை குடித்த யுவராஜ்!

பெண் போலீஸ் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: போலீஸ்கார சங்கீதாவுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.. இதை தவிர கணவனுக்கும் துரோகம் செய்துவிட்டார்.. கடைசியில் ஏமாளி புருஷன் தற்கொலை செய்து கொண்டு இறந்தே விட்டார்..!

செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்.. 24 வயதாகிறது.. ஒரு பேக்டரியில் வேலை பார்த்து வந்தார்.. யுவராஜுக்கும் செங்கல்பட்டு மகளிர் ஸ்டேஷனில் வேலை பார்த்து வரும் சங்கீதாவுக்கும் லவ் வந்துள்ளது.. இறுதியில் 3 மாசத்துக்கு முன்பு கல்யாணமும் செய்து கொண்டனர். இந்த கல்யாணத்தை, மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அமுதாதான் நடத்தி வைத்தார்.

Women Police husband commits suicide near Chengalpattu

ஆனால், யுவராஜ் மனசு ஆறவே இல்லை.. சங்கீதா பற்றின தகவல்கள் ஒவ்வொன்றாக அப்போதுதான் கேள்விப்படுகிறார்.. சங்கீதா தண்ணி அடிப்பாராம்.. அதுமட்டுமல்ல, முன்னாள் கணவன் புருஷோத்தமன் என்பவருடன் சங்கீதா தொடர்பில் இருந்துள்ளதாக தெரிகிறது..
இதனால் 2 மாசத்துக்கு முன்பு, அதே போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அமுதா, கணவன், மனைவியை பிரித்துவைத்து, இந்த விவகாரத்தையும் முடித்து வைத்தார்.

ஆனால், யுவராஜ் மனசு ஆறவே இல்லை.. சங்கீதா பற்றின தகவல்கள் ஒவ்வொன்றாக அப்போதுதான் கேள்விப்படுகிறார்.. சங்கீதா தண்ணி அடிப்பாராம்.. அதுமட்டுமல்ல, முன்னாள் கணவன் புருஷோத்தனுடன் என்பவருடன் சங்கீதா தொடர்பில் இருந்துள்ளதாக தெரிகிறது..

இது ரெண்டையும் யுவராஜ் கேள்விப்பட்டதும் அதற்கு மேல் நொந்து போய்விட்டார். கடந்த ஒரு மாசமாக சொந்தக்காரர் வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார். அப்போது அங்கு சென்ற சங்கீதா, எனக்கு டிரான்ஸ்பர் வந்துவிட்டது, நான் போகிறேன் என்று சொல்லியுள்ளார். இதை கேட்டதும் மேலும் வேதனை அடைந்த யுவராஜ் செங்கல்பட்டு ரயில்வே ஷ்டேஷன் அருகே, துத்தநாகம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.. அங்கிருந்தோர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் யுவராஜ் இறந்துவிட்டார்...

துத்தநாகம் சாப்பிடும்முன்பே, ஒரு கடிதத்தை எழுதியிருந்தார் யுவராஜ்.. அதில், சங்கீதா, சங்கீதாவின் கணவர் புருஷோத்தமன், பெண் போலீஸ் சந்தியா, ஜீவா இவர்கள் 4 பேரும்தான் தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் உறவினர்கள், சங்கீதாதான் எல்லாத்துக்கும் காரணம், அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம், மறியலிலும் ஈடுபட்டனர்.. சங்கீதாவை கைது செய்கிறோம் என்று போலீசாரும் அவர்களுக்கு உறுதி தந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+