மதுபோதையால் நடுரோட்டில் மட்டையான முதியவர்.. டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: போதையால் நடு ரோட்டில் மட்டையாகி கிடக்கும் அளவுக்கு டாஸ்மாக் கடைகள் பெருத்துவிட்டது திருநெல்வேலி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் நகரில். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாடினர்.

நெல்லை-தென்காசி நடுவேயுள்ள நகரம் பாவூர்சத்திரம். இங்கு மதுக்கடைகளின் அதிகரிப்பாமல், குடிமன்னர்களும் கூடி விட்டனர். மதுவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், பாவூர்சத்திரத்தில் மதுவை ஓவராக ஊற்றிக் கொண்டு நேற்றிரவு, நடு ரோட்டில் வயது முதிர்ந்த ஒருவர் மட்டையாகி கிடந்தார்.

இது அந்த ஊர் பெண்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நகரிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையை இன்று பெண்கள் சூறையாடினர். மதுபாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்தனர். போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications