கோவை அவிநாசி சாலையில் நிர்வாண நிலையில் அழுகிய பெண் சடலம் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
கோவையில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்றினை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
கோவை அடுத்த நீலம்பூரில் அவிநாசி சாலையில் வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார், நிர்வாண நிலையில் சடலம் இருந்ததால், வேறு ஏதேனும் காதல் விவகாரமா என்பது குறித்து அரசூர் போலீசார்கள் விசாரித்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications