குடிக்கத் தண்ணீர் இல்லை.. மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியனை குடத்துடன் முற்றுகையிட்ட பெண்கள்
தூத்துக்குடி: குடிநீர் கேட்டு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனை பெண்கள் முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 3வது வார்டு பகுதிகளான ராஜீவ் நகர், ராஜகோபால் நகர், ஹவுசிங் போர்டு காலனி, புஷ்பாநகர், காந்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு பகுதிகளில் 3ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களுக்கு கடந்த 2மாத காலமாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் கோகிலா மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இருந்தபோதும் பயனில்லாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பெண்கள் சுமார் 250க்கும் மேற்ப்பட்டவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநேரத்தில் தமிழக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான செல்லபாண்டியன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனைக்கண்ட பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பாண்டியனை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம் பேசிய செல்லபாண்டியன் குடிநீர் முறையாக விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதையடுத்து முற்றுகையிட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். அதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியன் ஆளைவிட்டால் போதும் என்ற ரீதியில் காரில் ஏறி எஸ்கேப் ஆனார். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications