குடிக்கத் தண்ணீர் இல்லை.. மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியனை குடத்துடன் முற்றுகையிட்ட பெண்கள்
தூத்துக்குடி: குடிநீர் கேட்டு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனை பெண்கள் முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 3வது வார்டு பகுதிகளான ராஜீவ் நகர், ராஜகோபால் நகர், ஹவுசிங் போர்டு காலனி, புஷ்பாநகர், காந்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு பகுதிகளில் 3ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களுக்கு கடந்த 2மாத காலமாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் கோகிலா மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இருந்தபோதும் பயனில்லாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பெண்கள் சுமார் 250க்கும் மேற்ப்பட்டவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநேரத்தில் தமிழக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான செல்லபாண்டியன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனைக்கண்ட பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பாண்டியனை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம் பேசிய செல்லபாண்டியன் குடிநீர் முறையாக விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதையடுத்து முற்றுகையிட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். அதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியன் ஆளைவிட்டால் போதும் என்ற ரீதியில் காரில் ஏறி எஸ்கேப் ஆனார். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications