இனி மன்னார்குடி கிடையாது, வெறும் மாஃபியா கும்பல்தான்.. ஸ்டாலின் பேச்சு
இனிமேல், மாஃபியா கும்பல், மாஃபியா கும்பல் என்றே அழைப்போம். மன்னார்குடி மாஃபியா என அழைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சசிகலா தரப்பை, மன்னார்குடி மாஃபியா என இனி திமுக அழைக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சசிகலா தரப்பை திமுகவினர் மன்னார்குடி மாஃபியா என அழைத்து வருகிறார்கள். இனிமேல் அப்படி அழைக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் சமீபத்தில் நடந்த களேபரத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதையடுத்து உரையாற்றிய ஸ்டாலின், மாஃபியா கும்பலின் தவறுகளுக்கு எங்களை இழிவுபடுத்தாதீர் என மன்னார்குடி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். எனவே, இனிமேல், மாஃபியா கும்பல், மாஃபியா கும்பல் என்றே அழைப்போம்.
மன்னார்குடி மாஃபியா என அழைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications