கீழடி முருகன் சிந்துவெளிக்கு மீண்டும் போகிறான் தேர்வு எழுத!
நீட் தேர்வு மையங்களை வடமாநிலங்களில் ஒதுக்கீடு செய்தது குறித்து பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கருத்து.
Recommended Video
சென்னை: நீட் தேர்வு மையங்களை வடமாநிலங்களில் ஒதுக்கீடு செய்தது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நாசமாக்குகிறது நீட் தேர்வு. இதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடுகிறது.
இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையங்களை வட மாநிலங்களில் ஒதுக்கியிருப்பது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த வஞ்சகத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இக்கொடுமைக்கு எதிராக குமுறல்களை கொட்டியுள்ளார்.
அவர் எழுதியுள்ளதாவது:
திரைகடலோடி தேர்வு எழுது!
எத்தனை யுகமாய் எத்தனை விதமாய் களவாடப்படுகிறது ஏகலைவன் விரல்!
கீழடியைச் சேர்ந்த முருகன் சிந்துவெளிக்கு மீண்டும் போகிறான் தேர்வு எழுத! வரலாறு திரும்புகிறது என்பது இதுதானோ!!