சுவாதி கொலை பற்றிய ஃபேஸ்புக் பதிவு - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்!
சென்னை: சுவாதி கொலையைத் தொடர்ந்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. அந்த ஃபேஸ்புக் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியது. நான் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு என்று விளக்கம் அளித்துள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன்.
கடந்த வெள்ளிகிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. இவ்வழக்கில் சிசிடிவி கேமிராவில் சிக்கிய மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

சுவாதி மரணம் குறித்து சமூக வளைத்தளங்களில் பரபரப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்ற வேளையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் கருத்து ஒன்றினை பகிர்ந்திருந்தார்.
மத மோதல்களை உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பிராமணப் பெண் என்பதால் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை எனவும், இதுவே அவர் ஒரு தலித்தாக இருந்திருந்தால் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருப்பார்கள் என அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டு உள்ளது.
காப்பாற்றிய பசுமாடு
மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் கொலை செய்யபடுவதை தடுத்து நிறுத்திய பசு மாடு... ( நுங்கம்பாக்கத்துல இவ்வளவு மனித நடமாட்டம் இருந்தும் யாருமே சுவாதி என்ற பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லையே... ) ஒரு பசுவிற்கு தெரிகிறது உயிரின் மதிப்பு. மனிதர்களுக்கு தெரியவில்லையே என்றும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.
ஒய்.ஜி.மகேந்திரனின் முந்தைய பகிர்வுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் இதற்கு ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த ஃபேஸ்புக் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியது. நான் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு" என்று கூறியுள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், கௌரவக் கொலை போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் போராடுகிறார். அவர்கள், சுவாதி கொலையில் இன்னும் அழுத்தத்துடன் போராடியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications