தேசியக் கொடியுடன் ஏற்காட்டில் தேர்தல் பிரசாரம்- அதிமுக அமைச்சர் மீது திமுக புகார்
Subscribe to Oneindia Tamil

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு தமிழக அமைச்சர் வீரமணி, தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது திமுகவின் புகார். அதாவது தேசிய கொடியுடன் அரசு வாகனத்தை ஏற்காடு தொகுதியில் பயன்படுத்தினார் அமைச்சர் வீரமணி. அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் திமுக தமது புகார் மனுவில் ஆதாரமாக சேர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications