என்னது 'நாசா' வை காணாததால் விமான நிலைய மேற்கூரைகள் தற்கொலை செய்கின்றனவா?
சென்னை: சென்னை விமான நிலைய மேற்கூரைகள் அடிக்கடி விழுந்து நொறுங்குகிறது அல்லவா? இதற்கு ஃபேஸ்புக்வாசிகள் 'சூப்பர்' காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்...
சென்னை விமான நிலையத்தில் நேற்று 32வது முறையாக மேற்கூரை கண்ணாடி நொறுங்கி விழுந்தது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல ஆயிரம் கோடி செலவில் நவீன வசதிகளுடன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளில் 10 முறை மேற்கூரைகளும் 9 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் என 31 முறை உடைந்து விழுந்து உள்ளன. இதில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றும் 32வது முறையாக மேற்கூரை கண்ணாடி விழுந்து நொறுங்கியது. இப்படி கண்ணாடி விழுந்து நொறுங்குவதற்கு ஃபேஸ்புக்வாசிகள் சூப்பர் காரணத்தைக் கண்டுபிடித்து ஷேர் செய்து வருகின்றனர்.
தோழர் விஜய்கோவிந்தராஜன் என்பவர் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார்
ஏர்போர்ட் 'நாசா' என செல்லமாக அழைக்கப்படுகிற முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் படத்தைப் போட்டு
உன்னைக் காணாமல் , விமான நிலைய மேற்கூரை கண்ணாடிகள் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றன ..என்று எழுதியிருக்கிறார்.
உண்மைதான்! 'நாசா' இல்லாத ஏக்கத்தில்தான் கண்ணாடிகள் தற்கொலை செய்கின்றனவோ?