மும்பையில் உடல் கருகி பலியான தமிழக கப்பல் அதிகாரி... தூத்துக்குடியில் சோகம்
மும்பையைச் சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியின் போது பலியான தமிழக அதிகாரியின் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது.
Recommended Video

தூத்துக்குடி: மும்பையில் தனியார் கப்பலில் பணிக்கு சேர்ந்த நான்கு மாதத்திலேயே தமிழக அதிகாரி உடல் கருகி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வடக்கு ராஜதெருவை சேர்ந்தவர் பர்னாந்து. கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த தனியார் கம்பெனிக்கு சொந்தமான எம்டி ஜெனிசா என்ற டேங்கர் கப்பலில் எலக்ட்ரிகல் பிரிவில் முதன்நிலை அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார்.

இந்த கப்பல் கடந்தசில நாட்களுக்கு முன்பு 30 ஆயிரம் டன்டீசலுடன் குஜராத் மாநிலம் காண்டலா துறைமுகத்திற்கு சென்றுள்ளது. கப்பல் துறைமுகம் அருகே வந்த போதுகப்பல் என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பர்னாந்து உள்பட 2 பேர் காயம்அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரவு பர்னாந்து சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார். இதுகுறித்து உடனடியாக பர்னாந்து தந்தைக்கு கப்பல் நிறுவனம் தகவல் தெரிவித்தது. இந்த தகவலை கேட்டஅவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக பர்னாந்து உறவினர்கள் குஜராத்துக்கு புறப்பட்டு சென்று அவரதுஉடலை இன்றுதூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உறவினர்கள், பர்னாந்துக்கு 15ம்தேதியுடன் முடிந்து விட்டநிலையில், அவர் மாலைவரை கூடுதலாக வேலை பார்த்துள்ளார். நள்ளிரவு ஊர் திரும்புவதாக இருந்த நிலையில், இந்த விபத்து நடந்துவிட்டதாக அவர்கள் வேதனைதெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications