முல்லைப் பெரியாறு குழுவுக்கு அனுமதி!: மத்திய அரசுக்கு உடனே நன்றி தெரிவித்த ஜெ.!!
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு அனுமதித்ததற்காக பிரதமர் மோடிக்கு உடனே நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து நேற்று அனுப்பிய கடிதம்:

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 7-5-2004 அன்று பிறப்பித்த உத்தரவிற்கிணங்க, மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அமைச்சரவையின் இந்த முடிவால், தமிழகத்தில் உள்ள 5 தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் துயரம் குறையும். இந்த விஷயத்தில் தங்களது விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications