For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதிராமங்கலம் மக்களுக்காக காவல்துறை தடையை மீறி இளைஞர்கள் ஆதரவு முழக்கப் போராட்டம்!

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதவாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

கும்பகோணம்: கதிராமங்கலம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பரங்கிவெட்டிக்காடு பகுதியில் இளைஞர்கள் காவல்துறை தடையை மீறி ஆதரவு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கதிராமங்கலம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி பரங்கிவெட்டிக்காடு பகுதியில் ஆதரவு முழக்கப்போராட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆம்பலாபட்டு, கரம்பயம், மேடையக்கொல்லை, நெம்மேலி, திப்பியக்குடி, கண்னுகுடி, முள்ளுர்பட்டிக்காடு, செண்டங்காடு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Youth conducts protest to support Kathiramangalam Villagers on saturday

அப்போது விவசாய வாழ்வாதாரத்தை அழிக்காதே என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினர். போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

English summary
In parangivettikkadu Village youth conducts protest to support Kathiramangalam Villagers on saturday. In this protest lots of people have participated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X