திருப்பூரில் அரசு பேருந்து மோதி இளைஞர் பலி.. பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!
பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் அருகில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கார்த்திக். இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கார்த்திக் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வளம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலத்திலிருந்து திருப்பூரை நோக்கி வந்த அரசு பேருந்து கார்த்தி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து கார்த்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தையும் அதன் ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநரையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் தொடர்ந்து பேருந்துகள், வேகமாக வருவதாகவும் விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தகவலறிந்து விரைந்து வந்த வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications