விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை முழுவதும் போராட்டம்... எழும்பூர் ரயில் நிலையம் முற்றுகை
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை முழுவதும் வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தை மாணவர்கள் இளைஞர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் சென்னையே போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்தது.

இதனைத் தொடர்ந்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அரை நிர்வாணப் போராட்டத்தை மேற்கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ஒன்று கூடினார்கள்.
திடீரென ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக முழுக்கங்களை எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிராகவும் பேனர்களை வைத்து போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தால் போலீசார் திக்குமுக்காடினார்கள்.












Click it and Unblock the Notifications