Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கெதிராக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு... சரண்டர் கடிதத்தில் யுவராஜ்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கோகுல்ராஜ் கொலைவழக்கு எனக்கெதிராக பொய்யாக ஜோடிக்கப்பட்டது என தனது சரண்டர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் யுவராஜ்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தலித் இளைஞரான கோகுல்ராஜ், வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Yuvaraj surrendered

இந்த கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த யுவராஜ் இன்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள சரண்டர் கடிதத்தில், "இந்த வழக்கு பொய்யாக எனக்கெதிராக ஜோடிக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Yuvaraj surrendered

மேலும், இந்த வழக்கிற்கும், தனக்கிற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்றும், பொய்யான முறையிலும், தவறான முறையிலும் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+