3 நாள் விசாரணைக்குப் பின் ஜாகீர் உசேன் மீண்டும் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகீர் உசேன் 3 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

பெங்களூரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ரயிலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த சம்பவத்தில் சுவாதி என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த தீவிரவாதி ஜாகீர் உசேனை, கியூ பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

தீவிரவாதி ஜாகீர் உசேன் கைது, அதைத் தொடர்ந்து வெடிகுண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகீரை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். 3 நாள் காவலில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தக் காவல் முடிந்த நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்க நீதிபதி சிவசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். அவரை மீண்டும் 13 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+