Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பத்திக்கிச்சே".. 25 வயது இளைஞனுடன் 40 வயது பெண் ஓட்டம்.. இப்ப லலிதா கர்ப்பம்.. கதறும் 22 வயது மகன்

25 வயது இளைஞரை 40 வயது பெண் திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: 25 வயதுள்ள இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம் 40 வயது லலிதாவுக்கு காதலாக கனிந்துள்ளது.. இறுதியில் லலிதா காதலில் விழுந்து.. கல்யாணத்தில் முடிந்து.. இப்போது கர்ப்பம் வேற..!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் அய்யப்பன்... சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்... இவரது மனைவி பெயர் லலிதா.. 40 வயதாகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகனுக்கு 22 வயதாகிறது.. இன்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... 2வது மகனுக்கு 21 வயதாகிறது.. கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

மாயம்

மாயம்

இந்நிலையில், கடந்த 13ம் தேதி லலிதா, திடீரென வீட்டில் இருந்த மாயமானார்.. அத்துடன் வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளையும் காணவில்லை.. இதனால் மகன்கள் 2 பேரும் பதறிப்போய் தாயை தேடி அலைந்துள்ளனர்.. இந்த நேரத்தில், வெளிநாட்டில் உள்ள கணவருக்கு, ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி உள்ளார் லலிதா.. அந்த மெசேஜில், தனக்கு கடலூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.. அத்துடன், தன்னுடைய கல்யாண போட்டோவையும் கணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார்..

 ஷேம் + லலிதா

ஷேம் + லலிதா

இதை பார்த்ததும் அதிர்ந்து போன கணவன், மூத்த மகனுக்கு இந்த விஷயத்தை சொன்னார். விஷயத்தை கேள்விப்பட்டு அதற்கு மேல் அதிர்ந்து போன மகன், ஒரத்தநாடு போலீசில் லலிதா மீது புகார் கொடுத்தார்... இந்த புகாரின்பேரில் போலீசார் அந்த ஜோடியை தேடி வருகின்றனர்.. கணவன் வெளிநாட்டில் இருந்துள்ள நிலையில், லலிதாவின் புத்தி தடுமாறி உள்ளது.. மகன்களுடன் லலிதா மகன்களுடன் ஒரத்தநாட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்..

 நெருக்கம் - இணக்கம்

நெருக்கம் - இணக்கம்

மகன்கள் இருவரும் காலேஜ் சென்றுவிடும் நிலையில், ஃபேஸ்புக்கில் கவனம் செலுத்தி உள்ளார்.. அப்போதுதான் அந்த இளைஞர் அறிமுகமாகி உள்ளார்.. அவருக்கு 25 வயதாகிறது.. பேஸ்புக் மூலம் நெருக்கமும் ஏற்பட்டு, திருமணம் வரை சென்றுள்ளது.. 5 ஆண்டுகளாக இந்த பேஸ்புக் பழக்கம் இவர்களுக்குள் இருந்துள்ளது. அதாவது, லலிதா காதலில் விழுந்தபோது, அந்த இளைஞருக்கு அப்போது ஜஸ்ட் 20 வயதுதான் போலும்.. 40 வயதுள்ள லலிதா, 25 வயது இளைஞரை திருமணம் செய்துள்ள நிலையில், இப்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்.

மெசேஜ்

மெசேஜ்

தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் கணவனிடமே அந்த மெசேஜில் சொல்லி உள்ளார்.. அத்துடன் காதலனுடன் லலிதா இருக்கும் போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.. இந்த ஜோடி இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. 20 பவுன் நகைகளுடன் லலிதா மாயமாகி உள்ளதால், இளைஞரை தேடி கடலூருக்கு சென்றுள்ளனர் போலீசார்.. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+