ச்சை! பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டுவைக்க மாட்டீங்களாடா.. கஸ்தூரியின் காரசார ட்வீட்
இளைஞருக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தஞ்சை: "பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? எவ்வளவு சின்ன புத்தி செயல்.. மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் டைம் சரியில்ல போல" என்று கஸ்தூரி ட்வீட் போட்டு இளைஞர் ஒருவரை வெளுத்து வாங்கி உள்ளார்.
இஸ்லாமிய இளைஞன் பெயர் முஜிபுர் ரஹ்மான்.. இவர் நண்பர்களுடன் கடந்த ஜூன் 5ம் தேதி தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு கோயில் சிற்பங்களுடன் நின்று போட்டோக்களை எடுத்துள்ளார். ஒவ்வொரு பெண் சிலையையும் கட்டிப்பிடித்து கொண்டும், முத்தம் கொடுத்து கொண்டும் போஸ் தந்துள்ளார்.

இந்த போட்டோக்களையும் அந்த இளைஞன் வெளியிட, திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் காதுகளுக்கு விஷயம் எட்டியது. உடனடியாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, முஜிபுர் ரகுமானை கைது செய்து திருச்சி சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.
பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் ! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை ! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான் ! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! pic.twitter.com/MERdD30Pu5
— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019
இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்த நடிகை கஸ்தூரி கொதித்து போய்விட்டார். இது சம்பந்தமாக தனது ட்வீட்டில், "பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்!
இளைய தலைமுறையினர் பெண்களை, கலையை, பிற மதங்களை மதித்து நடக்க வேண்டும்.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019
என்னவோ, மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் time சரியில்ல போல.
இளைய தலைமுறையினர் பெண்களை, கலையை, பிற மதங்களை மதித்து நடக்க வேண்டும். என்னவோ, மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் டைம் சரியில்ல போல" என கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications