கீழடி, பொருநையை தொடர்ந்து.. சோழ மண்ணில் மிளிர போகும் தமிழர் பெருமை! தமிழ்நாடு அரசு கலக்குதே!
தஞ்சாவூர்: தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதை தொடர்ந்து தற்போது சோழர் அருங்காட்சியகம் அமைக்க, டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய தீபகற்பத்தின் வரலாறு என்பது வடக்கில் இருந்து எழுத கூடாது, மாறாக தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு இரண்டு மிகப்பெரிய ஆதாரங்கள் நம்மிடையே இருக்கின்றன. ஒன்று கீழடி. இன்னொன்று பொருநை. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 4ம் கட்ட அகழாய்வில், செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் உறைகிணறுகள், மழைநீர் வடியும் வகையில் இரு துளைகளுடன் விரல்களால் அழுத்திப் பள்ளமிடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
இது தவிர விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செம்புப் பொருட்கள், இரும்புக் கருவிகளின் பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணிக்கற்களும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை ஆய்வு செய்ததில் கீழடி பொருட்கள் கி.மு 6ம் நூற்றாண்டை சேர்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு சமூகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவை பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணமாக கீழடி இருக்கிறது.
பொருநை இதைவிட மிகப் பழமையான இடமாகும். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மனித நாகரிகம் நதிக்கரையில்தான் தோன்றி வளர்ந்தன. எகிப்தில் நைல் நதி நாகரிகம், வட இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் என்பதை போல தென்னிந்தியாவில் தாமிரபரணி ஆற்றில் மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவில் பீட்டா அனாலிடிக் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வில் இந்த நெல் சுமார் 3200 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெல்மணிகள் முதுமக்கள் தாழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. தமிழர்களின் பெருமையை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் விதமாக இந்த கண்டுபிடிப்புகளை தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தஞ்சையிலும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட சோழப் பேரரசின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் ஒரு மிகப்பெரிய சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, பழனிவேல் தியாகராஜன் கடந்த 2023ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்திருக்கின்றன. சோழர்களுக்காக தஞ்சாவூரில் 51 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications