கதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்
Recommended Video
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயிலிருந்து வெளியேறிய எண்ணெய் ஆற்றில் கலந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தினர் எண்ணை குழாய் பதித்து அங்கிருந்து எண்ணை எடுத்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள். இந்த குழாய் பதித்து பல ஆண்டுகள் ஆனதால் சமீபத்தில் புதிய குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளியேற வேண்டுமென அப்போது அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், போலீசாரின், அடக்குமுறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி ஆற்றில் கலந்தது. தகவல் அறிந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கச்சா எண்ணெய் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி, சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஏற்கெனவே தண்ணீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் இதுபோன்ற பராமரிப்பு பணியின் போது பல விதமான ரசாயனங்கள் உள்ளே செலுத்தப்படுகின்றது. இதனால் குடிநீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியால் ஒட்டுமொத்த மக்களும் அழியும் நிலையும் உருவாகியுள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications