லுங்கி-டவுசருடன் வரக்கூடாது..தஞ்சை அருகே விஏஓ விதித்த ஆடைக்கட்டுப்பாடு..அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி விஏஓ அலுவலகத்திற்கு சான்றிதழ் வாங்க வரும் பொதுமக்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விஏஓ விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த புகார்கள் வந்ததையடுத்து விஏஓ கரிகாலனுக்கு தற்காலிகமாக பணி விடுப்பு ஆணை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தஞ்சை அருகே உள்ள செங்கிப் பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகராக கரிகாலன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
முன்னாள் விமானப்படை வீரரான கரிகாலன் சான்றிதழ் கேட்டு வரும் விவசாயிகளிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாக அங்குள்ள கிராம மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.

உள்ளே வர அனுமதிக்காமல்..
இதனிடையே, செங்கிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே போர்டு ஒன்றை வைத்திருந்தார். அதில், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சான்றிதழ் கேட்டு வருபவர்கள் கைலி, அரைக்கால் டவுசர் அணிந்து வரக்கூடாது. அதேபோல், பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும், விவசாய மக்கள் நிறைந்த அப்பகுதியில் விவசாயிகள் யாராவது லுங்கி அணிந்து வந்தால் உள்ளே விட அனுமதி மறுத்ததாகவும் விஏஓ கரிகாலம் மீது புகார்கள் எழுந்தது.

லுங்கி அணிந்து இருந்ததால்
இந்த நிலையில், விவசாயி ஒருவர் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பதற்காக விஏஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அந்த விவசாயி லுங்கி அணிந்து இருந்ததால், விஏஓ கரிகாலன் விவசாயியை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் வெளியில் காக்க வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வேலைக்கு போகும் போது..
இந்த நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "செங்கிப்பட்டியை சுற்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள், கூலி வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள்தான். எனவே வேலைக்கு போகும் போதோ.. வேலைக்கு சென்று விட்டு வரும்போதோ.. சான்றிதழ் வாங்குவதற்காக விஏஓ அலுவலகம் செல்வதுண்டு. விவசாய தொழிலாளர்கள் லுங்கி, டவுசர் அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

தற்காலிக பணி விடுப்பு ஆணை
ஆனால், விஏஓ இப்படி நடந்து கொள்வது மேலும் அலைக்கழிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் நியாயமற்றதாக இருப்பதாகவும் கூறினர். இது குறித்த புகார்கள் வந்ததையடுத்து விஏஓ கரிகாலனுக்கு தற்காலிகமாக பணி விடுப்பு ஆணை வழங்கி தஞ்சாவூர் ஆர்டிஓ,(பொ).,பழனிவேல் நடவடிக்கை எடுத்தார். மேலும், உரிய விசாரணைக்கு பிறகு அவரை வேறு வருவாய் கோட்டத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications