திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு
Recommended Video

தஞ்சாவூர்: திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு செய்யப்பட்டார்.
திராவிடர் கழகம் என்பது பெரியாரால் தொடங்கப்பட்ட இயக்கமாகும். சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி ஆகும்.

மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பதே, இக்கட்சியின் விழிப்புணர்வு நடவடிக்கையாகும். இக்கழகத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் கி.வீரமணி ஆவார்.
இந்த நிலையில் அடுத்த தலைவர் குறித்த தகவலை கி.வீரமணி அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சமூக நீதி மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கி.வீரமணி பேசுகையில் எனது காலத்துக்கு பிறகு தி.க, தலைவராக கலிபூங்குன்றன் செயல்படுவார் என அறிவித்தார். கலிபூங்குன்றன் தற்போது துணை தலைவராக உள்ளார்.
மயிலாடுதுறையில் பிறந்த கலிபூங்குன்றன், இளமை காலத்தில் இருந்தே பெரியாரின் தொண்டர் ஆவார். நெருக்கடி நிலையின்போது அரசு வேலையை துறந்து தி.க.வில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications