இபிஎஸ்க்கு அதிமுக வரலாறே தெரியாது.. ஜனதா தளத்திற்கு வேலை பார்த்தவர்.. தடதடக்கும் வைத்திலிங்கம்
மன்னார்குடி: 1984 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரும் எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என தேர்வு செய்யப்பட்டது சரி எனக்கூறி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை இதுவாகும். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே அடுத்த கட்ட செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். சட்ட ரீதியாக நாங்கள் பலமாகவே இருக்கிறோம். 100 % எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வரும். அந்த தீர்ப்பின் நிலைமைக்கு ஏற்ப எங்களது முடிவு அமையும்.எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை ஒருங்கிணைப்போம். 1984 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு தேவை என்றால் சபரீசனுடன் ரகசியமாக போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
அவருடைய மனசாட்சிக்கு இதுபற்றி தெரியும். ஊழலைப் பற்றி ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயக்குமார் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. அவருக்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது. ஜெயக்குமார் எந்த தொகுதியிலும் எம்.எல்.ஏவாக முடியாது. மாநிலங்களவை சீட்டு தனக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கிளிப்பிள்ளை போல பேசி வருகிறார்.
விஷசாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததற்கு அரசின் மெத்தன போக்குதான் காரணம். விஷ சாராயம் அருந்தி பலியானவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பதை யாரும் தவறு என சொல்லக்கூடாது. நிவாரணம் அறிவித்ததை அரசியலாக பேசக்கூடாது. எடப்பாடி அணியினர் பணம் கொடுத்து எங்களிடம் உள்ள ஒருசிலரை அழைத்துகொண்டிருப்பதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து செயல்படுவதை எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 95 சதவீதம் பேர் வரவேற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் வந்தால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வோம். அடுத்ததாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த இருக்கிறோம்" என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications