கஜாவால் கரும்பு தோட்டம் பாழாய்போனது.. தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை
கஜா புயல் சேதம் காரணமாக தஞ்சையை சேர்ந்த விவசாயி சாமிகண்ணு தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சாவூர்: கஜா புயல் சேதம் காரணமாக தஞ்சையை சேர்ந்த விவசாயி சாமிகண்ணு தற்கொலை செய்துகொண்டார்.
கஜா புயல் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகம் முழுக்க 39 பேர் பலியாகி உள்ளனர். ஏற்கனவே புயல் சேதம் காரணமாக இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

[டெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! ]
இரண்டு வாரம் முன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ் கஜா புயல் சேதத்தால் தற்கொலை செய்து கொண்டார். சென்ற வாரம் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த தென்னை விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் திருவாரூரில் பெண் ஒருவர் முகாமில் சுகாதாரமில்லாத உணவு சாப்பிட்டு பலியானார். இந்த நிலையில் தற்போது தஞ்சையை சேர்ந்த விவசாயி சாமிகண்ணு தற்கொலை செய்துகொண்டார்.
சோழகிரிபட்டியை சேர்ந்த சாமிகண்ணு 2 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து இருக்கிறார். கஜா புயலில் கரும்பு மொத்தமும் நாசமானதால் பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இத்தனை வருட உழைப்பு வீணானதில் அவர் மனமுடைந்து போய் உள்ளார்.
இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத அவர் இன்று மதியம் விஷம் அருந்தினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவசாயி சாமிகண்ணு பலினார்.
இது தஞ்சாவூர் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் நடக்கும் மூன்றாவது தற்கொலை ஆகும் இது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications