தஞ்சையில் மொத்தமாக முடங்கியது தொலைபேசி சேவை.. மக்கள் கடும் அவதி!
கஜா புயல் காரணமாக தஞ்சையில் மொத்தமாக தொலைபேசி சேவை முடங்கி உள்ளது
Recommended Video
தஞ்சாவூர்: கஜா புயல் காரணமாக தஞ்சையில் மொத்தமாக தொலைபேசி சேவை முடங்கி உள்ளது
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.
இதனால் டெல்டா பகுதிகள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மரங்கள் விழுந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கஜா புயல் காரணமாக தஞ்சையில் மொத்தமாக தொலைபேசி சேவை முடங்கி உள்ளது. மொத்தமாக அனைத்து நிறுவன தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
வர்தாவுக்கு சற்றும் சளைக்காத புயல்.. மிரட்டி விட்டு கிளம்பிச் சென்ற கஜா!
இதனால் மக்கள் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கும், அவசர உதவிகளுக்கு போன் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் ஆம்புலன்ஸை அழைக்க முடியாதவர்கள் உதவி எண் 100ஐ அழைக்கலாம் என்று போலீஸ் அறிவுறுத்தி இருக்கிறது.