எலான் மஸ்க்குடன்தான் போட்டி.. இந்தியாவில் விரைவில் தினமும் செயற்கைகோள் ஏவும் நிலை.. மயில்சாமி
தஞ்சை: நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை விரைவில் வரும் என இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திரயான் 1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அரையாண்டு பொதுக் குழு மற்றும் சிறப்பு கூட்டத்தில் சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்தியாவில் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் செயற்கைகோள் அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.

இந்த துறையில் இந்தியா தற்போது படிப்படியாக முன்னேறியுள்ளது. அந்த முன்னேற்றம் இன்று உலக அளவில் விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் 3 நாடுகளில் இந்தியா ஒன்றாக வளர்ந்துள்ளது. நிலவுக்கு இதுவரை 3 முறை விண்கலன்களை அனுப்பியிருக்கிறோம்.
நிலவில் உள்ள கனிம வளத்தை இனி அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஆராய்ச்சியின் முடிவில் என்னென்ன வளங்கள் நிலவில் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு அடுத்த 10 ஆண்டுகளில் பூமிக்கு என்னென்ன கனிமங்கள் தேவையோ அவற்றை சந்திரனில் இருந்தே கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

முன்பெல்லாம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு அதிக செலவு ஏற்பட்டது. ஆனால் இப்போது மற்ற நாடுகளை காட்டிலும் நாம் குறைந்த செலவிலேயே செயற்கைக்கோள்களை ஏவி வருகிறோம். ஆண்டுக்கு ஒரு செயற்கைகோள் அனுப்புவது அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 2021 இல் 1,200 செயற்கைகோள்களும் 2022 ஆம் ஆண்டு 2300 செயற்கைகோள்களும் 2023 இல் 3 ஆயிரம் செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் நாள்தோறும் செயற்கைகோள் ஏவும் நிலை நிச்சயம் வரும். செயற்கைகோளை சிக்கனமான செலவில் விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியாவுக்கும் எலான் மஸ்குக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. எலான் மஸ்கை விட குறைந்த செயற்கைகோளை அனுப்புவதற்கு குலசேகரப்பட்டினம் மண் உதவுகிறது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications