'எருமை மாடா டா நீ'.. விழா மேடையில் உதவியாளரை தரக்குறைவாக பேசிய அமைச்சர்.. வலுக்கும் கண்டனம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர், மேலவஸ்தாசாவடியில் நடைபெற்ற விழா ஒன்றில் தன் உதவியாளரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேடையிலேயே தரைக்குறைவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மேலவஸ்தாசாவடியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த மாநாடு மற்றும் கண்காட்சி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசுவதற்காக மேடைக்கு முன்பு சென்றார். அப்போது, பேசுவதற்கான குறிப்பு இல்லாததால் கடும் கோபமடைந்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். உடனடியாக, தனது உதவியாளர் பரசுராமன் எங்கே என்று சப்தமாக கேட்டுள்ளார். இதனை அறிந்த உதவியாளர் பரசுராமன் உடனடியாக மேடைக்கு அருகே அமைச்சரின் குறிப்புடன் ஓடி வந்தார்.
அப்போது அமைச்சர் உதவியாளரைப் பார்த்து, எருமை மாடா டா நீ என்று ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் மேடையில் வைத்தே திட்டினார். பின்னர், உதவியாளர் கொடுத்த அந்த பேப்பரை கையில் வாங்கி அவரிடமே தூக்கிப் போட்டுவிட்டார். இந்த சம்பவம் மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தனது உதவியாளரை தரக்குறைவாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கண்டன குரல்கள் கிளம்பியுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications