பிரதமரே மணிப்பூரை மறந்துட்டு.. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்றீங்களே!-ஸ்டாலின் கேள்வி
தஞ்சாவூர்: மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக மணிப்பூரில் அமைதியின்மை நிலவி வருகிறது. இதையெல்லாம் மறந்துட்டு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்கிறீர்களே! என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக மகளிர் அணி மாநாடு தஞ்சாவூரின் திருமலை சமுத்திரத்தில் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று பெற்று வருகிறது. மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்றிருக்கின்றனர். மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் ராணுவ படைப்போல வரவேற்பு கொடுத்திருக்கின்றனர் என்று முதல்வர் பாராட்டியுள்ளார்.

மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இந்திய மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். இங்குதான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications