கும்பகோணத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி! சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் மேயர்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட நிகழ்வு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மாநகராட்சி அலுவலரின் கவனக்குறைபாடான செயல்பாட்டால் கொடியேற்றிய மேயர் சரவணன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இதனிடையே தேசியக் கொடி விவகாரத்தில் கவனமின்றி செயல்பட்ட மாநகராட்சி ஊழியர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம் மாநகராட்சி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர விழா கொண்டாடப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் சரவணன் தேசியக்கொடி ஏற்றினார். கொடி தலைகீழாக பறப்பதை கவனித்த திமுகவை சேர்ந்த துணை மேயர் தமிழழகன் உடனடியாக இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கூறினார். இதையடுத்து அவசர அவசரமாக தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.

தலைகீழாக கொடி
இந்த நிகழ்வில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் ஒருவர் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றலமா என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதில் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை கவனித்த மாநகராட்சி அலுவலரும், ஊழியரும் தான் தவறு செய்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரியவந்தது.

கவனக்குறைவு
அவர்களது கவனக்குறைவான பணியால் மேயர் சரவணனுக்கும் சேர்ந்து அவப்பெயர் ஏற்பட்டதாக காங்கிரஸ் பிரமுகர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். இதனிடையே மேயர் சரவணனை சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் மேயர் தரப்பு விசாரித்து வருகிறது. ஆட்டோ ஓட்டுநராக இருந்து மேயராக உயர்ந்திருப்பவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

சமூக வலைதளங்கள்
ஆனால் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட விவகாரம் எப்படியோ சமூக வலைதளங்கில் வேகமாக பகிரப்பட்டது. இதனிடையே தேசியக் கொடி விவகாரத்தில் கவனமின்றி செயல்பட்ட மாநகராட்சி ஊழியர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications