கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை.. அதற்குள் புதுமணப்பெண் எடுத்த பகீர் முடிவு.. தகிக்கும் தஞ்சை!
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணமான ஒரு வாரத்தில் தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுமணப்பெண் ஒருவர் தனது காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான ஒரு வாரத்தில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புதுப்பெண் திடீரென எழுந்து கணவர் தனக்கு கணவன் கட்டிய தாலியை வீட்டில் ஒரு இடத்தில் கழற்றிவைத்துவிட்டார்.

புதுப்பெண்
பின்னர் காலையில் பார்க்கும் போது அந்த புதுப்பெண்ணை காணாமல் கணவர் அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுக்க தேடிய போது அவரது தாலி ஒரு இடத்தில் கிடந்தது. இதையடுத்து மனைவியை காணவில்லை என அந்த இளைஞர் ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் மாயம்
விசாரணையில் மாயமான பெண் திருமணத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததும் தற்போது வெளிநாட்டு இளைஞருடன் நடந்த அந்த திருமணத்தில் துளிக் கூட விருப்பம் இல்லாததும் தெரியவந்தது. காதலனை நினைத்து கடந்த ஒரு வாரமாகவே தூக்கமின்றி நிம்மதியின்றியும் தவித்து வந்துள்ளார்.

காதலனுடன் செல்ல முடிவு
இதையடுத்துதான் மனதில் ஒருவரை வைத்துக் கொண்டு வெளியில் இன்னொருவருடன் வாழக் கூடாது என முடிவு செய்தார். பின்னர் காதலனுடன் சென்று விட நினைத்தார். காதலனை தொடர்பு கொண்டார். தன்னை ஏற்றுக் கொள்கிறாயா என கேட்டவுடன் காதலனும் நான் ஏற்றுக்கொள்கிறேன், நீ வந்துவிடு என கூறியதாக தெரிகிறது.

கோபம்
இதையடுத்து அந்த புதுமணப்பெண் காதலனுடன் செல்ல தயார் நிலையில் இருந்தார். பின்னர் தனது கழுத்திலிருந்த தாலியை கழற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து கணவரின் புகாரின் அடிப்படையில் காதலனையும் புதுப்பெண்ணையும் தேடி போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் பெண்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் திருமணம் செய்யாதீர்கள் என்றும் இவ்வாறு திருமணம் செய்துவிட்டு தங்கள் குடும்ப மானம் இன்று காற்றில் பறந்துவிட்டதாக மணமகன் வீட்டார் கோபமாக பேசினர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications