ஜெனரேட்டர் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ்.. சபாஷ் ஒரத்தநாடு மக்கள்
Subscribe to Oneindia Tamil
ஒரத்தநாடு: கஜா புயலால் ஜெனரேட்டர் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் போடப்பட்டு வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் வேதாரண்யம் அருகே நேற்று முன் தினம் காலை கரையை கடந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது. மின் கம்பங்களும் மரங்களும் முறிந்து விழுந்தன. மின் இணைப்புகளை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அரசு ஒரு புறம் துரிதமாக செயல்பட்டு வந்தாலும் இருளிலும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டும் உள்ள ஒரத்தநாடு மக்கள் தங்கள் செல்போன் மற்றும் டார்ச் லைட்டுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications