நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி.. பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது
தஞ்சாவூர்: நிதி நிறுவனம் நடத்தி கும்பகோணத்தில் பொதுமக்களிடம் பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படும் எம் ஆர் கணேஷ், எம் ஆர் சுவாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ்- எம்.ஆர்.சுவாமிநாதன். ஸ்ரீநகர் காலணி, தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இவர்கள் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்
இப்பகுதி மக்கள் இவர்களை ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றே குறிப்பிடுகின்றனர். தொழிலில் பல கோடி வரை சம்பாதித்த இவர்கள், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்து, ஹெலிகாப்டர் ஒன்றையும் சொந்தமாக வாங்கியுள்ளனர். இதனால் இவர்களை ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றே மக்கள் அழைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்குப் பணம் இரட்டிப்பாக்கி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர்.

நிதி நிறுவன மோசடி
அதாவது விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ 82,000 தரப்படும் என்று அறிவித்தனர். இதுபோன்ற அறிவிப்புகளை நம்பக்கூடாது என ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறி வரும் நிலையிலும், பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். சமானிய மக்கள் தொடங்கி வணிகர்கள், தொழிலதிபர்கள் என இவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

மோசடி
முதலில் சில மாதங்கள் முதலீடு செய்தவர்களுக்குச் சரியாகவே பணத்தைத் திருப்பி அளித்து வந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் சுமார் ரூ.600 கோடி வரை மோசடி செய்துவிட்டதாகக் கடந்த ஆண்டு கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

ஏழு தனிப்படைகள்
ஹெலிகாப்டர் பிரதர்தஸ் எம்.ஆர்.கணேஷ் தஞ்சை மாவட்ட பாஜகவின் வர்த்தக தலைவராகவும் இருந்தார். பாஜகவில் செல்வாக்கு மிகுந்த நபராக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த குற்றதச்சாடுகள் கிளம்பின. இதனால் அவர்களை பாஜகவும் கட்சியிலிருந்து நீக்கியது. ஹெலிகாப்டர் பிரதரஸ் தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் துபாய் தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. கடந்த வாரம் தான் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டில் இருந்த சொகுசு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது
மேலும் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் பிரதர்தஸை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சூழலில் புதுக்கோட்டை வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் பிரதர்தஸை போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நேற்றிரவு (ஆகஸ்ட் 5) கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே இந்த நிதி மோசடி விவகாரத்தில் விக்டரி பைனான்ஸ் மேலாளர் ஸ்ரீகாந்த், கணக்காளர் மீரா, ஸ்ரீராம் , வெங்கடேஷான், கணேஷின் மனைவி அகிலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications