பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியை நடத்துவதில் உறுதி.. ரவி சங்கர் பிடிவாதம்!
Recommended Video

தஞ்சை: நீதிமன்ற அனுமதியுடன், தடையை நீக்கி தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில், வாழும் கலை அமைப்பு சார்பில், தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், இந்த தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோயிலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது அந்த பாரம்பரியத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ரவிசங்கர் நடத்தவிருந்த தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

பந்தல்கள் நாற்காலிகள்
கோவில் வளாகத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள், நாற்காலிகளை, உடனே அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தினர். எனவே தஞ்சையில் உள்ள மற்றொரு தனியார் மண்டபத்தில் வைத்து தியான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆச்சரியம்
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரவிசங்கர், இந்து மத கோவிலில் இந்துமத நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் உரிய அனுமதி பெற்று தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம் என்று தெரிவித்தார்.

மீண்டும் தியான நிகழ்ச்சி
இதனிடையே நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று மீண்டும் தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பிடிவாதத்தின் காரணமாக தஞ்சையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

சைவ சித்தாந்தம்
தஞ்சை பெரிய கோயில் மீட்பு குழு தலைவர் மணியரசன் கூறுகையில், சைவ சித்தாந்தத்திற்கு எதிராக ரவிசங்கர் குருஜி செயல்படுகிறார். துறவிகளுக்கு பிடிவாதம் அழகல்ல என்றார். வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், வழக்கு தொடர எல்லோருக்கும் உரிமையுள்ளது. சட்டப்படி நீதிபதிகள் முடிவெடுப்பார்கள். தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற கோவிலில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதியளிப்பது வழக்கம் இல்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications